சாமானிய மக்கள் தங்கள் உழைப்பில் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு குண்டு மணி தங்கமாவது காதில் மூக்கில் ஜொலிக்க வேண்டும் என நகைக்கடைகளில் நகை வாங்க வருகின்றனர் .பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் பிள்ளைக்களின் வருங்காலங்களை மனதில் வைத்து இருக்கின்ற பணத்திற்கு நகை வாங்குகின்றனர் மீண்டும் சிறுது பணம் சேர்த்து ஏற்கனவே வாங்கிய நகையோடு புதுநகையை வாங்க வரும்போது பழைய தங்கம் என கூ கூறி பவுனுக்கு 5000 ரூபாய் குறைத்தும் புது நகைக்கு 15% 18% செய்கூலி என்றும் ரூபாய் 5000 அதிகரித்தும் சாமானிய மக்களை தூத்துக்குடியில் அன்னையின் பெயரில் உள்ள நகைக்கடையினர் ஏமாற்றி வருகின்றனர் .டாஸ்மாக் கடையை திறந்து மக்களை ஏமாற்றும் அரசு என கூறும் சமூக ஆர்வலர்கள் தங்கமான நவீன கொள்ளையை கொண்டுகொள்ளாமல் அரசியல் பேசுகின்றனர் .ஏழைகளின் சேமிப்பை சுரண்டினால்தான் தங்கள் கொழுத்து வாழலாம் என நினைக்கும் அதிபர்கள் .அரசு அதை கண்டு கொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு சில நலத்திட்டங்களை செய்தால் போதும் எனவும் நினைக்கின்றனர் .தங்கத்தை புதியது பழையது என கூறி பொதுமக்களை ஏமாற்றும் நகைக்கடைகள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தூத்துக்குடி அன்னை கடைக்கு வந்து திருப்பிப்போன வாடிக்கையாளர் கூறினார்
தூத்துக்குடியில் பழைய தங்கம் சேதாரம் என ஏழைகளிடம் பணம் பறிக்கும் நகைக்கடைகள் !