தூத்துக்குடியில் நேற்று திடிரென்று வீசிய சூறைக்காற்று விசியது.கோரம்பள்ளம்
பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பயிரிடப்பட்டிருந்த வாழைத்தார்கள் அறுவடை செய்ய தயாராக இருந்தன இந்த நிலையில் அத்திமரபட்டி,காலான்கரை,வீரநாயக்கன்தட்டு ,முள்ளக்காடு, கோரம்பள்ளம் பகுதிகளில் வீசிய பேய்காற்றில் பல ஏக்கர் வாழைகள் தாருடன் சாய்ந்தும் ஒடிந்தும் கீழே விழுந்ததில் விவசாயிகளுக்கு பல லட்சம் ருபாய் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்தன. பல ஆண்டுகளாக முறையாக தூர்வாரப்படாமால் இருந்த கோரம்பள்ளம் குளத்தை கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தியதில் போதுமான அளவு தண்ணிர் இருந்ததால் விவசாயிகள் கடன் வாங்கி, நகைகளை அடகு வைத்தும் நம்பிக்கையுடன் வாழைபயிரிட்டனர்.நேற்று வீசிய பேய்காற்றில் வாழை மரங்கள் சாய்ந்ததில் அப்பகுதி விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.வேளான்மைதுறை அதிகாரிகள் சேதம் அடைந்த வாழைகளை கணக்கு எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டங்கள் மூலம் நஷ்டயீடு வழங்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரிக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.